<$BlogRSDUrl$>

Tuesday, April 06, 2004

கொஞ்சம் யோசனை 

கொஞ்ச நாளாவே ஒரு யோசன. எல்லா ஊட்டுக்கும் போயி ஒரு தடவ பாத்துட்டு வந்து எழுதறதுக்குள்ளயே மனுசனுக்கு தாவு தீந்து போச்சு. இதயே எத்தன நாளக்கிப் போயி படிச்சுட்டு வந்து சொல்ல முடியும்னு தெரியல. இதுனால நா ஒரு முடிவுக்கு வந்துட்டே(ன்). ஊட்டயல்லாம் அஞ்சு வகயா பிரிச்சுக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கே(ன்).
ஒண்ணு - வாரத்துல ஒரு தடவயாவது எட்டிப்பாத்து உருப்படியா ஏதாவது எழுதறவுங்க.
ரெண்டு - மாசத்துல ஒரு தடவயாவது எதாவது நல்லதா எழுதறவுங்க
மூணு - புதுசா வீடு கட்றவங்க
நாலு - வீட்டுக்கு வராம (ரெண்டு மூணு மாசத்துக்கு மேல) எங்கியாவது சுத்திகிட்டிருக்கறவங்க.
அஞ்சு - அடிக்கடி எழுதறவுங்க/எழுதாதவங்க , ஆனா பைசா பிரயோசனத்துக்கு ஆகாது

இதுல மொத ரெண்டு பேரு வீட்டுக்கு மட்டும் அடிக்கடி போயி நல்லது பொல்லா(த)து விசாரிச்சுட்டு வரலாம்னு இருக்கற(ன்).
மத்த மூணு பேருக்கும் என்னால ஒபயோகம் இல்லன்னாலும் ஒவுத்தரியம் இருக்காதுன்னு சொல்லிக்கறன்.

Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?

Weblog Commenting and Trackback by HaloScan.com