<$BlogRSDUrl$>

Friday, April 23, 2004

N-R 

கம்ப்யூட்டரப் பத்திச் சின்ன சின்ன விசயங்களத் தெரிஞ்சுக்குங்க, இல்லைன்னா கண்டதெல்லாம் ரிப்பேருன்னு சொல்லிக் காசு புடுங்கீருவானுங்கன்னு எச்சரிக்கறாரு நவன்.

இந்து வெளியிடுற செய்திகளையெல்லாம் ஒப்பிட்டுப் பாத்துக் கிழிகிழின்னு கிழிக்கறாரு இரமணீதரன். எங்க ஆரம்பிக்கறாரு எங்க முடிக்கறாரு, எது இவரோட உணர்வு, எது இவர் எடுத்தாளர(refer) அடுத்தவங்களோட உணர்வுன்னு 'படக்'குன்னு தெரிய மாட்டங்குது. வீட்ட ஒழுங்கா கூட்டி, பெருக்கி, அடுக்கி வச்சாருன்னா இவர் போடற பாதி சண்ட கொறையும்ங்கறது நம்ம கருத்து.

ரொம்ப வெய்யிலா? இங்க போங்க குளிரெடுக்கும்!! பா.ரா புது வீட்டுக்குப் போயிட்டாரு. மரணதண்டனை இல்லைன்னா மக்கள் உருப்படமாட்டாங்கன்னு சொல்றாரு இராஜா. ஊனமுற்றவங்கள கிண்டல் செஞ்ச டிவிக்காரனுங்கள ஏன் யாரும் திட்டலைன்னு கேக்கறாரு கொசப்பேட்ட. நானும் கோபப்பட்டு கொரல் குடுத்துட்டு வந்தே(ன்).

மொகமூடி போட்டுக்கிட்டு எப்படி எழுதறதுன்னு சொல்லித்தர்றாரு கே.வி.ஆர். ஒரே ஜில்லா (proxy server) வழியா வேற வேற மரத்துக்கடி(PC) லருந்து பஞ்சாயத்துப் பாக்கற மூணு நாலு பேருக்கும் ஒரே IP தான் வரும். நான், கைகாட்டி, துடிமன்னன், கர்ணன் இவங்கள்ள யாராவது ஒருத்தருதான் இணையத்துல ஓட்டுப் போட முடியும். நான் வேகமா இராஜா வீட்டுக்கு ஓடிப் போயி மரண தணடன பாவமய்யான்னு ஓட்டுப் போட்டுட்டு வந்துட்டேன்னு வச்சுக்கங்க, அப்பறம் மத்த மூணு பேரும் என்ன பாச்சா பண்ணாலும் ஓட்டுப் போட முடியாது. திரும்ப ஓட்டுப் போட வந்திட்டீங்களான்னு தொரத்தி உட்டர்றாங்க. மரமே இல்லாம சும்மா ஓசில வந்து நண்பர்கள்(!?) யாராவது எங்கயாவது comment-ல ஏதாவது பஞ்சாயத்துப் பண்ணிட்டுப் போனாலும் நாங்கதான் மாட்டுவோம்!!!

நம்ம வேலய இன்னும் நல்லாச் செய்யலாமான்னு யோசிக்கறாரு இராம்கி. செய்யுங்க நமக்கும் சந்தோசந்தான்.
ஒரே பேர்ல நெறய பேரு பெருகியிருக்கிறதக் கண்டு பொறுமையில்லாம பொருமிப் பொலம்பி நீ நீதான், இவர் அவர்தான், அவர் இவர்தான்னு கொழம்பிக்கிடக்கறாரு டுபுக்கு. நமக்கும் கொழப்பந்தான்.
மிச்சப் பஞ்சாயத்து நாளக்கி.

Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?

Weblog Commenting and Trackback by HaloScan.com