<$BlogRSDUrl$>

Saturday, April 24, 2004

S-Z 

வக்கீலாகாம வாத்தியாரா ஆன கதயச் சொல்றாரு சபாநாயகம். குவாண்டம் பத்திய சங்கரோட பள்ளிக்கூடம் நல்லாப் போகுது. நாமளும் இது மாதிரி ஏதாவது பண்ணலாம்னு ஒரு யோசன இருக்கு. கொழந்தைங்க வரஞ்ச ஓவியமெல்லாம் காட்டி சந்தோசமாக்கறாரு செல்வராசு.

தோழர் கந்தர்வன் இறந்ததுக்கு வருந்தறாரு பி.கே.எஸ். நமக்கும் ரொம்ப வருத்தமாயிடுச்சு. அவரோட செவப்புக் கவிதைகள நான் படிச்சுருக்கேன். அந்த மாதிரி உயிரோட்டமா தொழிலாளர் பிரச்சினைய எழுதறவுங்க கொறஞ்சி போயிட்டாங்க.

தெரிஞ்சும் பதில் சொல்லலைன்னா தல வெடிச்சுடும்னு பயமுறுத்தறாரு சுந்தரவடிவேலு. கண்ணுவலிப் பூவுக்கு ஆதரவுக் கொரல் கொடுக்கறாரு.

வெய்யக்காலத்துல ஒழுங்காத் தண்ணி குடிக்கலன்னா ஒண்ணுக்குப் பிரச்சின வரும்னு சொல்றாரு சுரதா. தெனமும் வெங்காயத்தக் கடிச்சுக்கிட்டு கம்பஞ்சோத்த நீளமா கரச்சுக் குடிச்சா கல்லாவது, மண்ணாவது எல்லாம் அடிச்சுக்கிட்டுப் போயிரும்!!! (என்ன பண்றது இந்த எடுபட்ட பயலுங்க பசுமப் புரச்சி பண்றன்னு சொல்லி நம்ம கம்பு சோளத்தயல்லாம் ஒழிச்சுப்புட்டானுங்க. நாகரீகம் பெருத்துப் போயி அரிசியத் தின்னு சக்கர வந்து சாவறாங்க மக்கள், வெறும்அரிசியத்தின்னு சின்னப் புள்ளைங்கள்ளாம் நாலஞ்சு வயசிலயே கண்ணாடி மாட்டிக்கிட்டுத் திரியுதுங்க).

புத்தாண்டு வந்து/போயி நமக்கென்ன ஆச்சு, எதுவுமே மாறலயேங்குது தீட்சண்யன் கவித. பொறந்த தேதிய வச்சு காதல் சோசியம் சொல்றாரு திவாகரு. மழையில நனையனும்னா இங்க போங்க. அப்பா இல்லாமயே கொழந்த பொறக்கும்ங்கறாரு வெங்கட்டு.

அறிவியலுக்கு ஒரு கூட்டுக்கடை போட்ருக்காங்க. கணினி வச்சு பொருள் வடிவமைக்கிறது எப்படின்னு சொல்றாரு காசி. சுந்தர வடிவேலு செல்லப் பத்திச் சொல்றாரு. இந்தக் காலத்துப் புள்ளைங்கல்லாம் உருப்படாம போய்க்கிட்டிருக்காங்கன்னு புதுக் கொரல் கெளம்பிருக்கு.

Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?

Weblog Commenting and Trackback by HaloScan.com