<$BlogRSDUrl$>

Thursday, April 01, 2004

T-Z 

தங்கமணி நல்லா எழுதறாரு. சண்ட போடாதீங்கன்னு மதிக்கும், முருகனுக்கும் நல்ல அட்வைசு கொடுக்கறாரு. தீட்சண்யனோட கவிதக நல்லா இருக்கு. படிச்சா சுருசுருன்னு நமக்கே கோவம் வருது. அங்கங்க போயி நல்ல விசயத்தயல்லாம் சுட்டுகிட்டு வந்து சொல்றாரு திவாகரு. அவரே நெலா முற்றத்துல உட்கார்ந்துகிட்டு முன்னேற வழி சொல்றாரு. சக்கர வியாதியப் பத்தி சொல்றாங்க தென்றல்ல. ஆனா இப்ப ஏ(ன்) தென்றல் வீசறதில்ல? ஆன்மீகம் பத்தி நெறயப் படிக்கணும்னா இங்க போங்க. கொள்ளிடம் நல்லா இருக்கு , ஆனா காவிரி மாதிரி இப்ப மூணு நாலு மாசமா வறண்டு கெடக்கு. அறிவியலு செய்தி நெறய இருக்கு இங்க. புரிஞ்சா நமக்கும் கொஞ்சம் படிச்சுக் குடுங்க (சொல்லிக் குடுங்க). பரிசல ரொம்ப நா காயப் போடாதய்யா, வெய்யில்ல வெடாப்பு உட்ரும். கேள்வியல்லாம் கேக்கலாந்தான், இப்ப பதிலு எப்ப சொல்லுவீங்க? பொம்பளப் புள்ளைங்கல்லாம் சேந்து தோட்டம் போடறாங்க. போயிப் பாருங்க.

Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?

Weblog Commenting and Trackback by HaloScan.com